கொனீபா மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் தமிழீழம் எதிர் சப்மி

இன்று நடைபெறவிருக்கும்  கொனீபா  மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் தமிழீழம் எதிர் சப்மி

மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024.இறுதியாட்டம்  08.06.2024 இன்று நடைபெறுகிறது ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வே போடோவில் ASPMYRA  மைதானத்தில்நடைபெறவிருக்கின்றது கடந்த 04.06.2024 தொடக்கம்  மகளிர் உலகக்கிண்ணப்போட்டிக்கு தெரிவாகிய அணிகளுக்கிடையில்  நடைபெற்றுவரும் போட்டியில் சப்மி நாட்டு அணியும் தமிழீழ அணியும் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளன.

நாம் ஒரு சிறிய இனம் நாம்  விளையாட்டின் மூலமும் சாதனை புரிவோமாக இருந்தால் எமது இனத்தின் பெருமையை உலகறியச்செய்யலாம்”.

என்ற எங்கள் தமிழீழ தேசியத்தலைவரின்  தீர்க்கதரிசனமான சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் எமது அடுத்த தலைமுறையினர் தயாராகிவிட்டனர். முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பி பார்க்கும் தருணத்தை உருவாக்கி  வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுத தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணியின்  வீராங்கனைகள் முழு முனைப்புடன் தமது அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த உணர்வு பூர்வமான தருணத்தை உருவாக்க உழைத்த தகமையும்,உதைபந்தாட்ட மதிநுட்பமும் வாய்ந்த பயிற்சியாளர்உதவிப்  பயிற்சியாளர்கள் உடலியல் மருத்துவர்,ஊடகத்துறையினர் அனைவருக்கும் எமது நன்றி. பெருமையுடனும், கௌரவத்துடனும் எமது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முயலும் எங்கள் அணியின் பின்னால் உலகளாவிய தமிழீழ சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் என அனைவரும் அணி திரண்டு எமது கனவை தமது கடமையாக ஏற்று களமாடும் தேசத்தின் புதல்விகளுக்கு உற்சாகமளிப்போம்

எமது அணியின் சீருடைகளை அணிந்துகொண்டு அனைத்து நாடுகளில் இருந்தும் இறுதி ஆட்டத்தினை நேரலையில் கண்டு கழித்து உங்கள் ஆதரவினை வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறோம். எமது சீருடைகள் மற்றும் உங்கள் அன்பளிப்புகளை வழங்க https://tamileelamfa.net/donate/    என்ற எமது இணையதளத்தினை பயன்படுத்தவும்.

தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம்

Similar Posts

  • அறிக்கை: தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வெளிவிவகாரம் தொடர்பானது / STATEMENT: Tamil Eelam FA with Regards to External Affiliation

    அறிக்கை: தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வெளிவிவகாரம் தொடர்பானது சனிக்கிழமை, 16 மார்ச் 2024 தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம் தனது உறுப்பினர்களுக்கான வெளிப்புற ஒழுங்கு விதிகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றது என்பதை தெரியப்படுத்த விரும்புகின்றோம். சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இது குறித்த விதிமுறைகள் ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருக்கிறன என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம். சம்மேளனத்தின் கொள்கைகள் மற்றும் நலன்களுக்கு எதிரான எந்தவொரு சம்மேளனங்கள் மற்றும் அமைப்புகளுடன் அவர்கள் தொடர்புகளை வைத்திருப்பது எமது சம்மேளனதின் ஒழுங்கு விதிகளை…

  • தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

    ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் CONIFA மகளிர்   உலகக்கிண்ணப்போட்டியில்  தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி CONIFA வின் இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான கலாச்சார தலைநகரமாக Bodø நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு பகுதியாக செயற்படுவதுடன் CONIFA  மகளிர் உலகக்கிண்ணம் 2024 இனை தொகுத்து வழங்கவுள்ளது. இந்தப்போட்டியானது விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு மாபெரும் நிகழ்வாகவும்,அமைதி,உள்ளடக்கம்,நிலைத்தன்மை மற்றும் நட்பு போன்ற மதிப்பு…

  • TAMIL EELAM ANNOUNCE WITHDRAWL FROM KURDISTAN 2024

    STATEMENT: Withdrawal of Tamil Eelam Men’s National Team from the CONIFA World Football Cup Kurdistan 2024 Saturday, 27th April 2024 Tamil Eelam Football Association has diligently undertaken preparations for the upcoming CONIFA Men’s World Football Cup 2024. However, our attention has been drawn to the security situation in the Middle East, prompting concerns within our…

  • We are recruiting!

    Let us know if you are keen to help the FA grow. We want to connect the Tamil community through football and sports in general. We are building a platform to compete against other communities, connecting us to the wider football community. Below is a list of skills we are looking for: Web designing Sales…

  • கொனீபா ஆசியக்கிண்ணம் 2025

    தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்தும் ஆண்களுக்கான கொனீபா ஆசியக்கிண்ணம் 2025 சுதந்திர உதைபந்தாட்ட சங்க கூட்டமைப்புடன் (GONIFA)இணைந்து தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனமானது 2025 ஆம் ஆண்டு ஆண்களுக்கான GONIFA ஆசியக்கிண்ணத்தினை நடத்தவிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.இந்தப்போட்டி யூலை 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை லண்டனில் உள்ள Elbridge Xcel Sports Hub இல் நடைபெறும். இவ் உதைபந்தாட்டப்போட்டியானது தமிழீழம்,திபெத் மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் பண்பாடு மற்றும் சமூகம் தொடர்பான…